மொபைல்போன்கள் விலை மீண்டும் உயர்கின்றது ? 3 சதவீதம் வரை உயர்வு இருக்கும்

இறக்குமதி செய்யப்படும் மொபைல் டிஸ்பிளேகளுக்கு மத்திய அரசு 10 சதவீத வரி விதித்துள்ளார்கள். இதன் காரணமாக 1.5 முதல் 3 சதவீதம் வரை மொபைல் போன்களின் விலை  உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.

மொபைல் போன்களுக்கான வரிவிதிப்பு விகிதத்தை 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக  மத்திய அரசு ஏப்ரல் ஒன்றாம்  தேதி முதல் உயர்த்தினார்கள் இதன் காரணமாக பல்வேறு ஸ்மார்ட்போன்களின் விலை அதிரடியாக உயர்ந்தது.

தற்போது இறக்குமதி செய்யப்படும் மொபைல்  டிஸ்பிளேகளுக்கு 10 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. இது அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இதன் காரணமாக மொபைல் போன்கள் விலையில் 1.5 முதல் 3 சதவீதம் வரை உயர்வு இருக்கும் என்று இந்திய செல்லுலார் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் அசோசியேஷன் (ஐசிஇஏ) தலைவர் பங்கஜ் மோஹிண்ரு தெரிவித்துள்ளார். 

இதன் காரணமாக வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மொபைல் டிஸ்ப்ளே குறைந்து, உள்நாட்டில் செல்போன் டிஸ்பிளேக்கள் உற்பத்தி செய்து உள்நாட்டு உற்பத்தியை மொபைல் நிறுவனங்கள் அதிகரிக்கும் என்ற நோக்கில் மத்திய அரசு இதைக் கொண்டுவந்து உள்ளதாக தெரிகின்றது.