UPI மூலம் ஜூன் மாதத்தில் ரூ.2.62 லட்சம் கோடி பண பரிவர்த்தனை

UPI transactions touch Rs 2.62 lakh crore in June

கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் மாதம் முதல்  இந்தியாவில் ஊரடங்கு அமலில் உள்ளது. இதன் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி இருக்கின்றார்கள். இதன் காரணமாக ஆன்லைன் பரிவர்த்தனை அதிகரித்துள்ளது.

கடந்த ஜூன் மாதத்தில் 134 கோடி முறை யுபிஐ மூலம் பணப் பரிவர்த்தனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. சுமார் 2 லட்சத்து 62 ஆயிரம் கோடி ரூபாய்க்கான பணப் பரிவர்த்தனை, யுபிஐ மூலம் செய்யப்பட்டு உள்ளதாக தேசிய பணப் பட்டுவாடா கழகம் தெரிவித்துள்ளது.