Tamilnadu Governent Bus Ticket Booking via paytm
தமிழகத்தில் 5-வது கட்ட ஊரடங்கு வருகிற 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த 5-வது கட்ட ஊரடங்கு காலகட்டத்தில் பல்வேறு தளர்வுகள் மத்திய மாநில் அரசுகளால் அறிவிக்கப்பட்டுள்ளது.
பேருந்து சேவைகள் பொறுத்தவரைக்கும் தமிழகத்தில் சில கட்டுப்பாடுகள் விதித்து ஒரு சில மாவட்டங்களில் தவிர மற்ற மாவட்டங்களில் துவங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மின்னணு கட்டணம் மூலம் டிக்கெட் வசூலிக்கும் முறையை பயன்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. முதற்கட்டமாக இரண்டு அரசுப் பேருந்துகளில் பரிசோதனை முயற்சியாக Paytm மூலம் கட்டணம் வசூலிக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.