144MP கேமரா மொபைலை அறிமுகம் செய்கின்றது சியோமி!

Xiaomi working on a 144 MP smartphone : The first 144MP camera smartphone ? Tech News in Tamil

கொரோனா வைரஸ் காரணமாக பல்வேறு நிறுவனங்கள் தங்களுடைய உற்பத்தியை நிறுத்தி உள்ளார்கள். இந்த நிலையிலும் சியோமி நிறுவனம் புதிய ஸ்மார்ட்போன்களை உருவாக்குவதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

ஏற்கனவே இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக ரெட்மி அறிமுகம் செய்த,  நோட் 9 புரோ மற்றும் ப்ரோ மேக்ஸ் மொபைல் போனை விற்பனை செய்ய முடியாமலும் உற்பத்தி செய்ய முடியாத நிலையில் உள்ளது.


இந்நிலையில் தற்போது சியோமி, 144 மெகா பிக்செல் ஸ்மார்ட்போனை உருவாக்குவதில் பணியாற்றி வருகின்றார்கள். இந்த மொபைல் Xiaomi Mi 10S Pro அல்லது Mi CC10 Pro என்கிற பிராண்டிங்கின் கீழ்அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.