NOKIA 2.4 இந்தியாவில் விரைவில் அறிமுகம் செய்யப்படுகின்றது

நோக்கியா நிறுவனத்தின் நோக்கியா 2.4 மாடலானது இந்தியாவில் விரைவில் அறிமுகம் செய்யப்படுகின்றது..

நோக்கியா மொபைல்களுக்கு இந்திய மக்கள் மத்தியில் எப்போதுமே ஒரு தனி வரவேற்பு இருக்கும். குறிப்பாக நோக்கியா நிறுவனம் பட்ஜெட் விலையில் பல்வேறு ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து வருகின்றார்கள். அந்த வகையில் சமீபத்தில் வெளியாகிய ஒரு  லிக்ஸ் அடிப்படையில் நோக்கியா 2.4 ஸ்மார்ட்போன் ஆனது இந்த நவம்பர் மாதத்தின் கடைசி வாரத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம் என்று தெரிகின்றது.

ஏற்கனவே இந்த ஸ்மார்ட்போன் கடந்த செப்டம்பர் மாதத்தில் இந்திய மதிப்பின்படி தோராயமாக ரூ.10,300 என்கிற விலைக்கு உலகளவில் அறிமுகப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மொபைல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டால் பத்தாயிரம் ரூபாய்க்கு கீழ்தான் அறிமுகம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கலாம்.