ஏர்டெல் வாடிக்கையாளர்கள் ஏப்ரல் 14 வரை ரீசார்ஜ் செய்யவில்லை என்றாலும் சேவை துண்டிக்கப்படாது

COvid 19 : Airtel extends pre-paid validity of low-income mobile customers, credits Rs 10

கொரோனா பரவுதலைக் கட்டுப்படுத்த அரங்கம் 21 நாள் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. இதன் காரணமாக பல்வேறு தொலைத்தொடர்பு நிறுவனங்கள் போட்டி போட்டு  தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு சலுகைகளை அறிவித்து வருகிறார்கள்.


அந்த வரிசையில் தற்போது ஏர்டெல் நிறுவனம் ஒரு சலுகையை அறிவித்து உள்ளார்கள், ஏப்ரல் 14 வரை பிரிபெய்டு வாடிக்கையாளர்கள் ரீசார்ஜ் செய்யவில்லை என்றாலும் சேவை துண்டிக்கப்படாது என ஏர்டெல் அறிவித்துள்ளது. அதேபோல் ரீசார்ஜ் செய்யப்படாவிட்டால் 10 ரூபாய் ஊக்கத்தொகை அளிக்கப்படும் அந்தப் பணத்தை பின்பு வசூலிக்கப்படும் என ஏர்டெல் தெரிவித்துள்ளார்கள் .